Putin
செய்திகள்உலகம்

முடங்கிறது ரஷ்யா – ஊதியத்துடன் விடுமுறை

Share

கொரோனாவின் தாக்கம் காரணமாக ஊழியர்களுக்கு ஒருவாரத்துக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்குவதாக ரஷ்ய அறிவித்துள்ளது.

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36, 339 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,063 பேர் சாவடைந்தும் உள்ளனர்.

ரஷ்யாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கத்தால் சாவடையும் எண்ணிக்கை அதிகரித்து வண்ணம் உள்ளது.

எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு புதிய அறிவிப்பை ரஷ்ய அதிபர் புடின் வெளியிட்டிருக்கிறார்.

இதன் பிரகாரம் ரஷ்யா முழுவதற்கும் ஊழியர்களுக்கு ஐப்பசி 30 ஆம் திகதியிலிருந்து கார்த்திகை 7 ஆம் திகதி வரை ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும் .” என்று புடின் அறிவித்திருக்கிறார்.

ரஷ்யாவில் 81 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸுக்கு எதிராக முதல் முதலாக ரஷ்யாதான் தடுப்பூசியை அறிமுகம் செய்தது

இந் நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு வெளிநாடுகளில் மட்டுமல்லாது உள்நாட்டிலும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

உலக நாடுகளில் ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதல் தவணையைப் போட்டுக்கொண்ட சிலர் இரண்டாவது தவணை தடுப்பூசி போட முடியாமல் காத்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

அத்துடன் ரஷ்ய மட்டுமல்ல பல உலக நாடுகளுக்கு கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....