Putin
செய்திகள்உலகம்

முடங்கிறது ரஷ்யா – ஊதியத்துடன் விடுமுறை

Share

கொரோனாவின் தாக்கம் காரணமாக ஊழியர்களுக்கு ஒருவாரத்துக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்குவதாக ரஷ்ய அறிவித்துள்ளது.

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36, 339 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,063 பேர் சாவடைந்தும் உள்ளனர்.

ரஷ்யாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கத்தால் சாவடையும் எண்ணிக்கை அதிகரித்து வண்ணம் உள்ளது.

எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு புதிய அறிவிப்பை ரஷ்ய அதிபர் புடின் வெளியிட்டிருக்கிறார்.

இதன் பிரகாரம் ரஷ்யா முழுவதற்கும் ஊழியர்களுக்கு ஐப்பசி 30 ஆம் திகதியிலிருந்து கார்த்திகை 7 ஆம் திகதி வரை ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும் .” என்று புடின் அறிவித்திருக்கிறார்.

ரஷ்யாவில் 81 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸுக்கு எதிராக முதல் முதலாக ரஷ்யாதான் தடுப்பூசியை அறிமுகம் செய்தது

இந் நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு வெளிநாடுகளில் மட்டுமல்லாது உள்நாட்டிலும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

உலக நாடுகளில் ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதல் தவணையைப் போட்டுக்கொண்ட சிலர் இரண்டாவது தவணை தடுப்பூசி போட முடியாமல் காத்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

அத்துடன் ரஷ்ய மட்டுமல்ல பல உலக நாடுகளுக்கு கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...