Putin
செய்திகள்உலகம்

முடங்கிறது ரஷ்யா – ஊதியத்துடன் விடுமுறை

Share

கொரோனாவின் தாக்கம் காரணமாக ஊழியர்களுக்கு ஒருவாரத்துக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்குவதாக ரஷ்ய அறிவித்துள்ளது.

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36, 339 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,063 பேர் சாவடைந்தும் உள்ளனர்.

ரஷ்யாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கத்தால் சாவடையும் எண்ணிக்கை அதிகரித்து வண்ணம் உள்ளது.

எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு புதிய அறிவிப்பை ரஷ்ய அதிபர் புடின் வெளியிட்டிருக்கிறார்.

இதன் பிரகாரம் ரஷ்யா முழுவதற்கும் ஊழியர்களுக்கு ஐப்பசி 30 ஆம் திகதியிலிருந்து கார்த்திகை 7 ஆம் திகதி வரை ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும் .” என்று புடின் அறிவித்திருக்கிறார்.

ரஷ்யாவில் 81 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸுக்கு எதிராக முதல் முதலாக ரஷ்யாதான் தடுப்பூசியை அறிமுகம் செய்தது

இந் நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு வெளிநாடுகளில் மட்டுமல்லாது உள்நாட்டிலும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

உலக நாடுகளில் ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதல் தவணையைப் போட்டுக்கொண்ட சிலர் இரண்டாவது தவணை தடுப்பூசி போட முடியாமல் காத்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

அத்துடன் ரஷ்ய மட்டுமல்ல பல உலக நாடுகளுக்கு கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...