ரஷ்யா கொடி
செய்திகள்உலகம்

உலக நாடுகளுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை!

Share

“கச்சா எண்ணெயை வாங்க மறுத்தால் ஜேர்மனிக்குச் செல்லும் எரிவாயு குழாய்களைத் துண்டித்து விடுவோம். எரிவாயு குழாய்கள் துண்டிக்கப்பட்டால் அங்கு பெற்றோலியப் பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விடும்.”

– இவ்வாறு உலக நாடுகளுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்க ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்து வருகின்றது.

அமெரிக்காவின் நடவடிக்கையால் சில நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து பெற்றோலியப் பொருட்கள் வாங்குவதையும், அதற்கான உரிமத்தை இரத்துச் செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

ஐரோப்பிய யூனியனின் செயற்பாடுகளால் ஆத்திரமடைந்த ரஷ்யத் துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக், ஐரோப்பிய கூட்டமைப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

“ஐரோப்பிய கூட்டமைப்பு ரஷ்யாவிடம் இருந்து பெற்றோலியப் பொருட்கள் வாங்குவதை நிறுத்தினால், ரஷ்யாவும் அதற்குப் பதிலடி கொடுக்கும்.

ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் மற்றும் பெற்றோலியப் பொருட்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்துவோம்.

குறிப்பாக ஜேர்மனிக்குச் செல்லும் எரிவாயு குழாய்களைத் துண்டித்து விடுவோம். எரிவாயு குழாய்கள் துண்டிக்கப்பட்டால் அங்கு பெற்றோலியப் பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விடும்.

ரஷ்யாவிடம் இருந்துதான் ஐரோப்பிய கூட்டமைப்பின் பெரும்பான்மை நாடுகள் பெற்றோலியப் பொருட்களை வாங்குகின்றார்கள். எங்கள் மீது தடை விதித்தால், பாதிக்கப்படுவது நீங்களும்தான் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

இதனைப் புரிந்துகொண்டு இது போன்ற தடைகளை விதிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” – என்றார்.

ரஷ்யாவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அமெரிக்காவின் யோசனையை ஜேர்மனி நிராகரித்துள்ளது. அமெரிக்கா கூறுவதுபோல் ரஷ்யாவிடம் இருந்து பெற்றோல் வாங்குவதை நிறுத்தினால், பெற்றோலியப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விடும். எனவே, இதுபோன்ற நடவடிக்கையை எடுக்க ஜேர்மனி விரும்பவில்லை என்று கூறியுள்ளது.

நெதர்லாந்து நாடும் இதே முடிவை எடுத்துள்ளது. ஜேர்மனி, நெதர்லாந்து நாடுகளின் முடிவால் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது.

#World News

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 10
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் புதிய வரைபடம்: கடல் எல்லைக் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துகிறதா ஐ.ஆர்.ஜி.சி?

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), தனது கடற்படையின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ்...

world 9
செய்திகள்உலகம்

வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் எதிர்வரும் 7ஆம் திகதி இலங்கைக்கு அரசமுறைப் பயணம்!

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To...

world 8
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்!

ஹோர்முஸ் ஜலசந்திக்குள் (Strait of Hormuz) நுழைய முயன்ற எதிரிப் போர்க்கப்பல்களை “விரைவான மற்றும் தீர்க்கமான...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாட்ஸ்அப் காணொளி அழைப்பு மோசடி: இலங்கையர்களுக்கு கணினி அவசரகால ஆயத்தக் குழு எச்சரிக்கை!

இலங்கையர்களை இலக்கு வைத்து வாட்ஸ்அப் (WhatsApp) தளத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் புதிய வகை காணொளி அழைப்பு...