நாட்டில் இதுவரை 2000 ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு, எதிர்வரும் தினங்களில் பிரதேச செயலாளர் மட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளபப்படும் என்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இதுவரையில் 5 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இத் தொகை வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் 36 ஆயிரம் குடும்பங்களுக்கு தற்போது 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது என மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் கூறினார்.
மொனராகலை மாவட்டத்தில் 48 ஆயிரத்து 602 குடும்பங்கள் இந்தக் கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர் என மாவட்டச் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்தார். இதுவரை மாவட்டத்தில் 6 கோடி 50 லட்சத்துக்கும் மேற்பட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
Leave a comment