Currency 1
செய்திகள்இலங்கை

ரூ. 2000 கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு!!

Share

நாட்டில் இதுவரை 2000 ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு, எதிர்வரும் தினங்களில் பிரதேச செயலாளர் மட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளபப்படும் என்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இதுவரையில் 5 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இத் தொகை வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் 36 ஆயிரம் குடும்பங்களுக்கு தற்போது 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது என மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் கூறினார்.

மொனராகலை மாவட்டத்தில் 48 ஆயிரத்து 602 குடும்பங்கள் இந்தக் கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர் என மாவட்டச் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்தார். இதுவரை மாவட்டத்தில் 6 கோடி 50 லட்சத்துக்கும் மேற்பட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...