54 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கத்திமுனையில் கொள்ளை! – இளைஞன் மடக்கிப்பிடிப்பு

Share

கத்திமுனையில் கொள்ளையிட வந்த இளைஞர் அங்கிருந்தவர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஜூரித்த சம்பவம் யாழ்ப்பாணம் – நல்லூர் – கைலாசபிள்ளையார் கோவிலடியில் அமைந்துள்ள சொக்கன் கடையில் இன்று மதியம் நடைபெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சொக்கன் கடைக்குள் புகுந்த குறித்த இளைஞன் தனது பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை காண்பித்து பணம் கேட்டுள்ளார்.

இதன்போது, அங்கு நின்றவர்கள் குறித்த இளைஞனை மடக்கி பிடித்து கத்தியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பொலிஸாருக்கு அறிவித்த நிலையில், அங்கு வந்த பொலிஸாரிடம் இளைஞனை ஒப்படைத்துள்ளனர்.

அதேவேளை, குறித்த இளைஞன் இன்று – காலை, அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் உள்ள புத்தக கடைக்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அந்த பெண் கூக்குரல் எழுப்பியநிலையில் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

அதன் பின்பே நல்லூர் – சொக்கன் கடைக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...