109807728 duglasdevanantha 3
செய்திகள்அரசியல்இலங்கை

அரசு எதையும் தாம்பாளத் தட்டில் தந்துவிடாது; பேசிப் பெற பலமான ஆணை வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!

Share

தேசிய மாநாட்டை நடத்தி கட்சியை மீண்டும் எழுச்சிபெறச் செய்ய அனைவரும் தயாராக வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். யாழ். தலைமையகத்தில் இன்று (25) நடைபெற்ற கட்சிச் செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மாற்றம் வேண்டி வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகள் இன்னும் நிறைவேறவில்லை. இருப்பினும், சவாலான சூழலில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசாங்கத்திற்கு இன்னும் கால அவகாசம் வழங்குவதே நியாயமான நிலைப்பாடாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

எந்த அரசும் தமிழ் மக்களுக்கு எதையும் தாம்பாளத் தட்டில் ஏந்தி வந்து தரப்போவதில்லை. கடந்த காலங்களில் நாம் ஆட்சியில் பங்கெடுத்தமையே பேச்சுவார்த்தைக்கான தளமாக அமைந்தது. இப்போது ஆளும் கட்சியில் உள்ள தமிழ் எம்.பிக்கள் அரசிடம் பேசிப் பெறும் ஆற்றல் இன்றி அரசுக்குள் கரைந்து போயுள்ளனர் எனச் சாடினார்.

அண்மையில் இடம்பெற்ற தனது கைது மற்றும் கட்சி மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த உண்மைகளை எதிர்காலம் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் என்றும் அவர் உறுதியளித்தார்.

கட்சியின் பலவீனங்களை அடையாளங்கண்டு சீர்செய்வதற்காக விரைவில் தேசிய மாநாடு நடத்தப்படவுள்ளது. இதன் மூலம் கட்சி கட்டமைப்புகளைச் சீராக்கி, மீண்டும் ஒரு அரசியல் பலத்தைப் பெற்று, அரசாங்கத்துடன் பேசித் தீர்வு காண்பதற்கான அதிகாரத்தை மக்கள் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

 

 

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...