செய்திகள்இலங்கை

பரீட்சைகள் ஒத்திவைக்க தீர்மானம் – கல்வி மறுசீரமைப்பு அமைச்சு

Share

உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றை, அடுத்த வருடத்திற்கு பிற்போடத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ் வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றை, எதிர்வரும் 2022ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையையும், நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரை இவ் வருடத்திற்கான உயர்தரப் பரீட்சையையும் நடாத்துவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்திருந்தது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்றுக் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் அரச பரீட்சைகளை நவம்பர் மாதத்தில் நடாத்துவது தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையிலேயே 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை என்பன, அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பான அறிவித்தலை, கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த விடுத்துள்ளார்.

துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் ஏனைய முடிவுகள் தொடர்பில் அறிவிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ampitiya therar
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழர்களுக்கு எதிரான வன்முறைக் கருத்து: அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்குப் பிடிவிறாந்து, பயணத்தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களையும், தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்’ என...

24 6719ef7b673a7
அரசியல்செய்திகள்

டயானா கமகே கடவுச்சீட்டு விசா வழக்கு: மேலதிக சாட்சியங்களுக்காக பிப். 16க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத்...

Waqf Board Donates Rs 10 Million 1170x658 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் சேதமடைந்த மதத் தலங்களைப் புனரமைக்க: வக்ஃப் சபை 10 மில்லியன் நிதி நன்கொடை!

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால்...

Untitled
அரசியல்இலங்கைசெய்திகள்

கிராம உத்தியோகத்தர்களுக்கு எதிரான பொதுவான குற்றச்சாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் – இம்ரான் மகரூப் கோரிக்கை!

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும்,...