பாணின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, இன்று (28) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இவ்வாறு பாணின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக புறக்கோட்டை மொத்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் நேற்று அறிவித்திருந்தமையைத் தொடர்ந்து பாணின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கொத்து ரொட்டி விலையை 10 ரூபாவினாலும் சிறிய உணவுகளுக்கான விலையை 5 ரூபாவினாலும் நாளை (29) முதல் அதிகரிக்கவும் சிற்றுண்டி உரிமையாளர் சங்கம் ஏலவே தீர்மானித்துள்ளது.
#SrilankaNews
Leave a comment