basil
செய்திகள்அரசியல்இலங்கை

மூவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டுகோள்!

Share

அமைச்சர்களான விமல்வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகிய மூவரையும் அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளாரென அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பசில் ராஜபக்ச அமெரிக்கா பயணிப்பதற்கு முன்னர் இது தொடர்பான யோசனையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

இவர்கள் மூவரையும் வைத்துக்கொண்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாதெனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளாரென அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

2022 ஜனவரி முற்பகுதியில் அமைச்சரவை மற்றும் அரச நிறுவனங்களின் பிரதான பதவிகளில் மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது.

இதன்போதே மேற்படி மூவரையும் நீக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...