america canada
செய்திகள்உலகம்

வெளிநாட்டிற்குள் நுழைய முயன்ற அகதிகள்: வாகனத்திற்குள்ளேயே பனியில் உறைந்து பலி!

Share

பனியில் உறைந்து இந்தியர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்கா-கனடா எல்லையில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் அண்டை நாடான கனடா வழியாக, சட்டவிரோதமாக அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர்.

மனிதர்களைக் கடத்தும் கடத்தல்காரர்கள் அகதிகளிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு, அவர்களை அமெரிக்காவுக்குள் கடத்திக்கொண்டு விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்தநிலையில், சட்டவிரோதமாக அகதிகள் சிலரை வேனில் அடைத்து அமெரிக்காவுக்குள் கடத்தி செல்ல முயன்றபோது, அமெரிக்காவின் வடக்கு டகோடா மாகாணத்துக்கு அருகே கனடா எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் குறித்த வேனைத் தடுத்து நிறுத்தி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களின் சோதனையில் குறித்த வேனுக்குள் ஒரு பச்சிளம் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை 4 பேர் பனியில் உறைந்து, உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, கடத்தல்கார ர் ஒருவரான ஸ்டீவ் ஷாண்ட் (வயது 47) என்பவரைக் கைது செய்து விசாரணையினை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில், பனியில் உறைந்து இறந்தபோன 4 பேரும் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...