Australia
செய்திகள்உலகம்

மகிழ்ச்சியில் அகதிகள்- விசா வழங்கியது அவுஸ்திரேலியா

Share

அவுஸ்திரேலியாவில் அகதிகளுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களிலும் குடிவரவுத் தடுப்புகளிலும் கடந்த 8 ஆண்டுளுக்கு மேலாக சிறைவாசம் இருந்த 4 அகதிகளுக்கு இணைப்பு விசாக்களை அவுஸ்திரேலியா வழங்கியுள்ளது.

இதன் காரணமாக , இந்த 4 அகதிகளும் அவுஸ்திரேலியாவில் தற்காலிகமாக வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதே வேளை , இணைப்பு விசாக்களில் உள்ள அகதிகளுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதி வழங்கப்படாது என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

விசா கிடைத்த ஆப்கானிய அகதி அகமது ஜஹிர் அசிசி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தான் இனி கைதி கிடையாது என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் .

மேலும் தெரிவித்த அவர் “நான் விடுதலை ஆகிவிட்டேன். 8 ஆண்டுகளாக சிறையில் கிடந்த நான், இன்று விடுதலை ஆகிவிட்டேன் என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்,’ என ஆப்கானிய அகதி அசிசி குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு அவுஸ்திரேலியாவில் இன்னு பல அகதிகள் உள்ளதாகவும் அவர்களுக்கும் விசா கிடைத்தால் அவர்களும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் எனவும் அவுஸ்திரேலியா அரசுக்கு நான் நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...