202201271401414905 Cuddalore Two students were killed when an old building SECVPF
செய்திகள்இந்தியா

அகதிகள் கட்டடம் இடிந்து விழுந்து சிறுவர்கள் உயிரிழப்பு!

Share

தமிழ்நாடு – கடலூர் மாவட்டத்தில் இலங்கை ஏதிலிகளுக்காக கட்டப்பட்ட, கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாடு – கடலூர் மாவட்டம் வண்டிக்குப்பம் பகுதியில் அமைந்திருந்த பழைய கட்டடம் அருகே சிறுவர்கள் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்த போது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், ஸ்தலத்திலேயே இரு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை படுகாயத்துடன் மீட்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளை அகற்றி மேலும் சிறுவர்கள் சிக்கியுள்ளனரா? என தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை விபத்து நடந்த கட்டிடமானது இலங்கையில் தஞ்சம்கோரிச் சென்ற ஏதிலிகளுக்காக கட்டப்பட்ட பழைய குடியிருப்பு எனக் கூறப்படும் அதேவேளை, எவரும் வசிக்காத நிலையில் பழுந்தடைந்த நிலையில் கட்டடங்கள் இருந்தமையால், இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews #India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...