skynews calais migrants 5594324
செய்திகள்உலகம்

அகதிகள் படகு மூழ்கி 31 பேர் பலி! – பிரதமர் அவசர கூட்டத்திற்கு அழைப்பு

Share

புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்ற சந்தர்ப்பத்தில் விபத்துக்குள்ளாகிய நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர் என பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்றபோது கலேஸ் பகுதி அருகே புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற குறித்த படகு மூழ்கியதில் படகில் பயணித்த 31 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றுள்ளது. விபத்தில் 5 பெண்கள், ஒரு சிறுமி ஆகியோர் உட்பட 31 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என பிரான்ஸ் மேயர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் குறித்த பகுதியில் உடல்களை பார்த்த மீனவர் ஒருவர் வழங்கிய தகவலின்படி மேட்டுப்பணியினர் அங்கு விரைந்துள்ளனர். அங்கு சென்ற மீட்புப்படையினரால் நீரில் மூழ்கியவர்களையும் உயிரிழந்த உடல்களையும் மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கடத்தல்காரர்கள் என தெரிவிக்கப்படும் புலம்பெயர்ந்தோர் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆங்கில கால்வாய் ஊடாக ஆள்கடத்தல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில். குறித்த பகுதியில் இடம்பெற்ற மிகப்பெரும் புலம்பெயர்ந்தோர் தொடர்பான படகு விபத்து இது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அவசரக் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

skynews dover migrants 5594079

#World

Source- SkyNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

1763816381 road 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல்...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...