corona death 56767
செய்திகள்இலங்கை

அக்கா தம்பி சடலம் மீட்பு! – சோதனையில் இருவருக்கும் தொற்று

Share

அக்கா தம்பி சடலம் மீட்பு! – சோதனையில் இருவருக்கும் தொற்று

பூகொட, யகம்பே பிரதேசத்தைச் சேர்ந்த வீட்டினுள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பூகொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் (வயது–43) அக்காவும், முச்சக்கரவண்டி சாரதியாக பணிபுரியும் அவரது சகோதரருமே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.

அவர்கள் இருவரும் நேற்றிரவு வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்ற பின்னர் நித்திரைக்கு சென்றனர் என அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

அவரது உறவினர்களில் ஒருவர் அவர்கள் வீட்டுக்கு சென்றபோது அவர்கள் இருவரும் கீழே தரையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த உறவினர் சுகாதாரப் பிரிவுக்கு அறிவித்ததை அடுத்து இருவரதும் சடலங்கள் வத்துபிடிவல ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனையில் அவர்கள் இருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...