corona death 56767
செய்திகள்இலங்கை

அக்கா தம்பி சடலம் மீட்பு! – சோதனையில் இருவருக்கும் தொற்று

Share

அக்கா தம்பி சடலம் மீட்பு! – சோதனையில் இருவருக்கும் தொற்று

பூகொட, யகம்பே பிரதேசத்தைச் சேர்ந்த வீட்டினுள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பூகொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் (வயது–43) அக்காவும், முச்சக்கரவண்டி சாரதியாக பணிபுரியும் அவரது சகோதரருமே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.

அவர்கள் இருவரும் நேற்றிரவு வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்ற பின்னர் நித்திரைக்கு சென்றனர் என அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

அவரது உறவினர்களில் ஒருவர் அவர்கள் வீட்டுக்கு சென்றபோது அவர்கள் இருவரும் கீழே தரையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த உறவினர் சுகாதாரப் பிரிவுக்கு அறிவித்ததை அடுத்து இருவரதும் சடலங்கள் வத்துபிடிவல ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனையில் அவர்கள் இருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FUK4fwSxpXY292Ae6yxC9
செய்திகள்உலகம்

மியன்மாரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ஒரே நாளில் இருமுறை அதிர்ந்ததால் மக்கள் அச்சம்!

மியன்மாரில் இன்று மாலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இது அப்பகுதி மக்களிடையே பெரும்...

court
செய்திகள்இலங்கை

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்: மோட்டார் சைக்கிள் அதிரடிப்படை அதிகாரிகள் 6 பேருக்கு விளக்கமறியல்!

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை...

image 2f3d7cb265
செய்திகள்இலங்கைபிராந்தியம்

70 ரூபாய் குடிநீர் போத்தல் 100 ரூபாய்க்கு விற்பனை: கொழும்பு வர்த்தகருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக...

penguin viral video 1769232930
உலகம்செய்திகள்

தனிமைப் பயணம்: இணையத்தைக் கலக்கும் நிகிலிஸ்ட் பென்குயின்! தத்துவமா? அல்லது அறிவியலா?

தன் கூட்டத்தை விட்டுப் பிரிந்து, பனிபடர்ந்த மலைகளை நோக்கித் தனியாக நடந்து செல்லும் ஒரு சிறிய...