Northern Railway line
செய்திகள்இலங்கை

வடக்கு ரயில் பாதை புனரமைப்பு: இந்திய நிதியுதவியுடன் பணிகள் இன்று உத்தியோகபூர்வமாகத் தொடக்கம்!

Share

‘டித்வா’ புயல் காரணமாகக் கடுமையாகச் சேதமடைந்த வடக்கு ரயில் பாதையைப் புனரமைக்கும் பணிகள் இன்று (11) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் இணைந்து இப்பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.

இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதியுதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக, முதற்கட்டப் பணிகளுக்காக 5 மில்லியன் அமெரிக்க டொலர் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான ரயில்வே கட்டுமான நிறுவனத்தினால் (IRCON/Indian Railway Construction) இந்தப் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

வடக்கு ரயில் மார்க்கம் பின்வரும், மஹவ முதல் ஓமந்தை வரை, ஓமந்தை முதல் யாழ்ப்பாணம் வரை, மதவாச்சி முதல் மன்னார் வரை மூன்று கட்டங்களின் கீழ் முழுமையாகப் புனரமைக்கப்படவுள்ளது.

அண்மைய புயல் அனர்த்தத்தினால் வடக்கு ரயில் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய அரசின் இந்த விரைவான நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு வடக்கு – தெற்கு இடையிலான போக்குவரத்து இணைப்பை மீண்டும் சீர்படுத்த பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...