செய்திகள்இலங்கை

வீதிகளை புனரமைத்துத் தருக! – முல்லைத்தீவு மக்கள் கோரிக்கை!!

Share

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கோட்டைகட்டிய குளம் மற்றும் தென்னியன் குளம் ஆகியவை உள்ளிட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகள் இன்மையால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.

பழம்பெரும் விவசாய கிராமங்களான தென்னியன் குளம், கோட்டைகட்டிய குளம் மற்றும் அம்பலப்பெருமாள் குளம் உள்ளடங்கலாக சுமார் 10க்கும் மேற்பட்ட விவசாயக் கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

இந்த குடும்பங்களுக்கான அடிப்படை வசதிகள் இன்மை காரணமாக குறித்த  கிராம மக்கள் வேறு தேவைகளுக்காக பல்வேறு பிரதேசங்களுக்கும் செல்லவேண்டியுள்ளது.

இந்த நிலையில் குறித்த பிரதேசத்தின் பிரதான வீதியாக காணப்படுகின்ற வீதிகள் இதுவரை உரிய முறையில் புனரமைக்கப்படாமை மற்றும் போக்குவரத்து வசதிகள் இன்மை காரணமாக தாங்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளோம் என  கிராம மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே தங்கள் கிராமங்களுக்கான பிரதான வீதியை புனரமைத்து போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

25 6906ded777bf4
செய்திகள்இலங்கை

நான்கு முன்னணி ஒப்பந்ததாரர்களுக்கு அரச ஒப்பந்தங்களில் பங்கேற்கத் தடை: மத்திய அதிவேக வீதி ஒப்பந்தத்தில் தவறான தகவல் அளித்ததே காரணம்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் (Ministry of Transport, Highways and Urban...

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...