sog 2
செய்திகள்இலங்கை

இலங்கையில் முதன்முறையாக அபூர்வ அறுவை சிகிச்சை!

Share

இலங்கையில் முதன்முறையாக அபூர்வமான அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்ட மருத்துவமனையில் வெற்றிகரமான வித்தியாசமான முறையில் இந்த சிறுநீரக அறுவை சிகிச்சை இடம்பெற்றுள்ளது.

இந்த அறுவை சிகிச்சையில் நோயாளியை மயக்கமாக்காது சிறுநீரகத்தில் உள்ள கல்லை வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது எனவும் இதுவே இலங்கையில் இவ்வாறு மேற்கொள்ளப்படும் முதல் சத்திர சிகிச்சை எனவும் மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் புதிய தொழில்நுட்ப இயந்திரத்தின் உதவியுடன் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நோயாளியின் சிறுநீரகம் முழுவதும் பரவியுள்ள 5 சென்ரிமீற்றர் அளவிலான கல் மற்றும் வேறு சிறிய சிறிய கற்கள் என்பவை இதன் மூலம் அகற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நோயாளியை மயக்கமடையச் செய்யாது முதன்முறையாக வெற்றிகரமாக இடம்பெற்ற அறுவை சிகிச்சை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
04 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சார சபை மறுசீரமைப்பு: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க – தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு!

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறை மற்றும் ஊழியர்களின் எதிர்காலம் குறித்த முக்கிய கலந்துரையாடல், ஜனாதிபதி...

03 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விநியோகம்: இந்தியாவிடம் கோரிக்கை விடுத்த அண்டை நாடுகள்!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால், இலங்கை,...

02 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுமக்களின் கருத்துகளைக் கோரும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

2026-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான (ஏப்ரல் – ஜூன்) மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி...

01 11
செய்திகள்உலகம்பிராந்தியம்

மத்திய கிழக்கு கடல்வழிப் பதற்றம்: மேலும் மூன்று கப்பல்கள் மீது தாக்குதல்!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழலுக்கு மத்தியில், வளைகுடா பிராந்தியத்தின் கடல்வழிகளில் தாக்குதல்கள் தொடர்கின்றன....