IMG 20220302 WA0001
செய்திகள்அரசியல்இலங்கை

ரஞ்சன் விவகாரம்! – சர்வதேச நாடாளுமன்றை நாடுகிறது எதிரணி

Share

ரஞ்சன் ராமநாயக்க விவகாரம் தொடர்பில் சர்வதேச நீதிமன்றம் மற்றும் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் ஆகியவற்றிடமும் முறையிடப்படும் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்றது.

இந்நிலையில் இலங்கையில் சிறை தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோர் ஜெனிவா சென்றுள்ளனர்.

ஜெனிவாவில் வைத்து இருவரும் வெளியிட்டுள்ள காணொளிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

” ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. அவரின் மனித உரிமை மீறப்பட்டுள்ளது. இது தொடர்பில் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஜெனிவா வந்துள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கு தெளிவுப்படுத்தப்படும்.

அத்துடன், சர்வதேச நீதிமன்றம் மற்றும் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் ஆகியவற்றிடமும் முறையிடப்படும். மேற்படி அமைப்புகளுடன் இலங்கைக்கு உடன்படிக்கைகள் உள்ளன. எனவே, அதன்பிரகாரம் செயற்பட வேண்டிவரும். ரஞ்சனுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு.” – என்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...

25 690cd7c953777
செய்திகள்உலகம்

மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் சர்ச்சை: மெக்சிகோ அழகி பாத்திமா போஷை ‘முட்டாள்’ எனக் கூறி அவமானம் – போட்டியாளர்கள் வெளிநடப்பு!

தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு,...