ranilkb
செய்திகள்அரசியல்இலங்கை

ரணிலின் மனு மீதான விசாரணை ஜனவரி 28இல்!!!

Share

அரசியல் பழிவாங்கல்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி பரிந்துரைகளை வலுவிழக்கச் செய்யும் எழுத்தாணை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரிய மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதி விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனு நிஸங்க பந்துல கருணாரத்ன, தேவிகா அம்பரத்ன மற்றும் டி.எம்.சமரக்கோன் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை, பரிந்துரைகளை வலிவிழக்கச் செய்யுமாறு ரணில் விக்ரமசிங்க தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆணைக்குழு தனது விசாரணைகளை மேற்கொண்ட விதம் முற்றிலும் சட்டவிரோதமானது என மனுவில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு செய்த முறைப்பாடுகளுக்கு தாம் பொறுப்புக்கூற வேண்டும் என ஆணைக்குழுவின் இறுதி பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளமையை ரணில் விக்ரமசிங்க உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆணைக்குழுவில் ஆஜராகி விடயங்களை தௌிவுபடுத்துவதற்கு போதுமான கால அவகாசம் வழங்காமையானது, நாட்டின் சட்டத்திற்கு மாத்திரமின்றி தர்மத்திற்கும் முரணான செயல் என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...