1020182718117966398730
செய்திகள்அரசியல்இலங்கை

ஊழல், மோசடிகளுக்கு பதிலளிக்க முடியாமல் நேர்காணலை நிறுத்திய ரணில்!!

Share

சிங்கள ஊடகம் ஒன்று நடாத்திய நேர்காணலில் ஊழல், மோசடிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளால், கோபமடைந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேர்காணலை இடையில் நிறுத்தி விட்டு எழுந்து சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் திருடர்களைப் பாதுகாத்தமை தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கூறியிருந்தமை தொடர்பிலும் செய்தியாளர்கள் கேள்விக் கணைகளைத் தொடுத்திருந்தனர்.

இக் கேள்விகளால், கோபமடைந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தான் திருடன் இல்லை என ஏற்றுக்கொள்ளுமாறு செய்தியாளரிடம் கூறியதுடன், நேர்காணலை முன்னெடுப்பது என்றால், நாம் வேறு பிரச்சினைகள் பற்றி பேசுவோம் எனவும் கோபமாகத் தெரிவித்துள்ளார்.

திருடன் என்றால் திருடன் என்று சொல்லுங்கள். இல்லை என்றால் இல்லை என்று கூறுங்கள், இரண்டில் ஒன்றை செய்வோம் அல்லது ஊடக சந்திப்பை நிறுத்துவோம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளரிடம் கடிந்துகொண்டுள்ளார்.

எனினும் குறித்த கேள்வியை இடைநிறுத்தாது, தொடர்ந்து கேள்விகள் கணைகள் ரணில் விக்கிரமசிங்கவை நோக்கிச் சென்றதால், நேர்காணலை நிறுத்துவோம்.

நீங்கள் படித்து விட்டு மனதை மாற்றிக்கொண்டு வேறு ஒரு நாள் வாருங்கள் எனக் கூறி விட்டு அவர் எழுந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SRilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...