நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 14 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சீரற்ற காலநிலையால் 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் ரி.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், சேத விபரங்கள் தொடர்பில் குறித்த பிரதேச செயலகத்தினூடாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு கொழும்பு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அனுப்பி வைக்கப்பட உள்ளது எனவும் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment