sajith 3
செய்திகள்அரசியல்இலங்கை

ராஜபக்ச அரசை விரட்டியடிக்க அணிதிரளுங்கள்! – சஜித் அறைகூவல்

Share

பல எதிர்பார்ப்புகளுடன் பிறந்திருக்கும் இந்த புதிய ஆண்டின் ஆரம்பத்திலேயே குடும்ப ஆட்சியில் தத்தளித்து கொண்டிருக்கும் இந்த ராஜபக்ச அரசை விரட்டியடிக்கவேண்டும்.

இதற்காக அனைத்து மக்களும் அணிதிரள வேண்டும் என நட்டு மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ அழைப்பு விடுத்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

ராஜபக்ச அரசின் சர்வாதிகார ஆட்சியால் மக்கள் வறுமையின் கோரத்தாண்டவத்தின் பிடியில் சிக்கித்தவிர்க்கின்றனர். எண்ணிலடங்காத சொல்லெணாத்துன்பங்களையும் வேதனைகளையும் தாங்கிக்கொண்டு புதிய வருடத்தில் கால் எடுத்து வைத்துள்ளனர்.

இந்த அரசு தொடர்ந்து ஆட்சியில் நீடித்தால் நாட்டு மக்கள் தினந்தோறும் பட்டினி சாவை எதிர்கொள்ள வேண்டி வரும். இந்த கொடுங்கோல் அரசை வருட ஆரம்பத்திலேயே வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும்.

எனவே இந்த கொடுங்கோல் அரசை குடும்பத்துடன் வீட்டுக்கு அனுப்ப அனைவரும் அணிதிரள வேண்டும் – என்றார்.

#Srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1647574276 3019
செய்திகள்இந்தியா

பகவத் கீதையின் செய்தியை உலகமயமாக்கும் முயற்சி: 50க்கும் மேற்பட்ட தூதரகங்கள் மூலம் முன்னெடுக்கப்படுகிறது!

பகவத் கீதையின் செய்தியை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லும் நோக்கில், இந்திய வெளிவிவகார அமைச்சகம் முயற்சிகளை...

DSC 4271
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலை யாத்திரை: பொலித்தீன் இல்லாத தூய தளமாகப் பராமரிக்கத் திட்டம்!

எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாதமலை யாத்திரையை (Sri Pada Pilgrimage) அடிப்படையாகக்...

DSC 4271
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியா சிங்கர் காட்சியறையில் பயங்கர தீ விபத்து: முழுமையாக எரிந்து சேதம்!

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்த சிங்கர் (Singer) இலத்திரனியல் காட்சியறை இன்று செவ்வாய்க்கிழமை (நவம்25) காலை...

25 68ee64d88d4b3
செய்திகள்இலங்கை

இலங்கையில் பலத்த மழை நீடிப்பு: தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடலில் இன்று (நவம் 25) புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக...