1628820916 7447003 hirunews
செய்திகள்அரசியல்இலங்கை

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கமும் போராட்ட களத்தில்!!!

Share

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட நிறைவேற்று குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாதுகாப்பற்ற புகையிரத சமிஞ்சை முறைமையினால் பொது பயணிகளின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளமை, புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் முறையற்ற இடமாற்றம், புகையிரத திணைக்களத்தில் பதவி வெற்றிடங்களுக்கு புதிய நியமனங்கள் வழங்கப்படாமை, புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளில் 700 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படாமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.

இப் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க புகையிரத திணைக்களம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

மேற்குறிப்பிடப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.

எமது தொழிற்சங்க நடடிக்கைகள் பொது பயணிகளுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...