24 66095a5e368ce
இந்தியாசெய்திகள்

அடுத்த கட்சிகளைத் திட்டுவதற்கு நான் வரவில்லை.., ராதிகா சரத்குமார்

Share

அடுத்த கட்சிகளைத் திட்டுவதற்கு நான் வரவில்லை.., ராதிகா சரத்குமார்

விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் நடிகை ராதிகா சரத்குமார் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பாஜகவில் இணைத்த நிலையில், அவரது மனைவி ராதிகாவுக்கு விருதுநகர் மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது சரத்குமார் மற்றும் அவரது மனைவி வேட்பாளர் ராதிகா இருவரும், விருதுநகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அந்தவகையில், நேற்று ராதிகா சரத்குமார் பிரச்சாரத்தில் பேசுகையில், “அடுத்த கட்சிகளைத் திட்டுவதற்கு நான் வரவில்லை, அது தேவையில்லை. ஏற்கனவே இந்த தொகுதியில் இருந்தவர் இங்கு வரவில்லை என்று தான் மக்கள் கூறுகிறார்கள்.

ஆனால், நான் எப்போதும் இந்த தொகுதியில் தான் இருப்பேன். டாஸ்மாக், போதைப் பழக்கம் போன்றவற்றால் ஆண்கள் பாதிக்கப்படுவதால் பெண்கள் கஷ்டப்படுகிறார்கள். அதை ஒழிக்க வேண்டும்.

இந்தியாவிற்கு மீண்டும் பிரதமராக மோடி வரவேண்டும். உங்கள் வாக்குகளை எனக்கு செலுத்தி வெற்றி பெற செய்யுங்கள். கடந்த ஆண்டுகளில் பாஜக ஆட்சி ஊழல் செய்யாமல் உள்ளது” என்றார்.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...