24 66095a5e368ce
இந்தியாசெய்திகள்

அடுத்த கட்சிகளைத் திட்டுவதற்கு நான் வரவில்லை.., ராதிகா சரத்குமார்

Share

அடுத்த கட்சிகளைத் திட்டுவதற்கு நான் வரவில்லை.., ராதிகா சரத்குமார்

விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் நடிகை ராதிகா சரத்குமார் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பாஜகவில் இணைத்த நிலையில், அவரது மனைவி ராதிகாவுக்கு விருதுநகர் மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது சரத்குமார் மற்றும் அவரது மனைவி வேட்பாளர் ராதிகா இருவரும், விருதுநகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அந்தவகையில், நேற்று ராதிகா சரத்குமார் பிரச்சாரத்தில் பேசுகையில், “அடுத்த கட்சிகளைத் திட்டுவதற்கு நான் வரவில்லை, அது தேவையில்லை. ஏற்கனவே இந்த தொகுதியில் இருந்தவர் இங்கு வரவில்லை என்று தான் மக்கள் கூறுகிறார்கள்.

ஆனால், நான் எப்போதும் இந்த தொகுதியில் தான் இருப்பேன். டாஸ்மாக், போதைப் பழக்கம் போன்றவற்றால் ஆண்கள் பாதிக்கப்படுவதால் பெண்கள் கஷ்டப்படுகிறார்கள். அதை ஒழிக்க வேண்டும்.

இந்தியாவிற்கு மீண்டும் பிரதமராக மோடி வரவேண்டும். உங்கள் வாக்குகளை எனக்கு செலுத்தி வெற்றி பெற செய்யுங்கள். கடந்த ஆண்டுகளில் பாஜக ஆட்சி ஊழல் செய்யாமல் உள்ளது” என்றார்.

Share
தொடர்புடையது
b08a9d50370cb3acf536546f5c0646b0 1
செய்திகள்இலங்கை

இந்தியா-இலங்கை இடையே புதிய கப்பல் பாதை: ராமேஸ்வரம் – தலைமன்னார் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே, ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையேயான புதிய கப்பல் பாதையை ஆரம்பிப்பது குறித்து...

25 69005c8fb83eb
செய்திகள்இந்தியா

விசேட சோதனை: 2025ல் இதுவரை 2,097 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன – பொலிஸார் தகவல்

இந்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி...

25 69002cc98d286
செய்திகள்இலங்கை

கொழும்பு நிலப் பதிவேடு: அதிகாரப்பூர்வ கோப்பில் இருந்த கடிதம் மாயம் – விசாரணைக்கு நீதிவான் உத்தரவு

கொழும்பு நிலப் பதிவேட்டின் அதிகாரப்பூர்வ கோப்பில் இருந்த ஒரு கடிதம் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம்...

25 68fc59844d405
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தி வழக்கில் வடக்கு மாகாணத்தில் தீவிர விசாரணை: முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் கைது

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட இஷாரா செவ்வந்தி நாட்டில் தலைமறைவாகவும், வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லவும் உதவிய நபர்கள்...