24 660a270d3ed7e
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு வரவிருந்த கப்பலில் அபாயகரமான பொருட்கள்

Share

இலங்கைக்கு வரவிருந்த கப்பலில் அபாயகரமான பொருட்கள்

அமெரிக்காவில் (America) விபத்துக்குள்ளாகிய இலங்கைவந்த சிங்கப்பூர் (Singapore) சரக்குக் கப்பலில் 764 டொன் அபாயகரமான பொருட்களை இலங்கைக்கு ஏற்றிச் செல்ல முயற்சித்துள்ளதாக அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த சரக்கு கப்பலானது, கடந்த மார்ச் 26ஆம் திகதியன்று அமெரிக்க பால்டிமோர் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பெரும்பாலும் எரியக்கூடிய பொருட்கள், அபாயகரமான பொருட்கள், வெடிபொருட்கள் மற்றும் லித்தியம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய 56 கொள்கலன்கள் ஏற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், ஏனைய 4,644 கொள்கலன்களில் என்ன இருந்தது என்பது இன்னும் தெரிய வராதுள்ள நிலையில் இந்த கப்பலின் அடுத்த பயன திட்டமிடலானது கொழும்பிற்கே (Colombo) விடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி, தென்னாப்பிரிக்காவின் (South Africa) கேப் ஒஃப் குட் (Cape of Good) ஹோப்பைச் சுற்றி, 27 நாட்களை கடத்தி புத்தாண்டுக்குப் பின்னர் கப்பல் இலங்கையை அடைய திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள நீர்நிலைகள், சுழியோடிகள் பாதுகாப்பற்றவை என அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...

eb shok
இலங்கை

மின்சாரம் தாக்கியதில் ஒன்பது மாத குழந்தையின் தாய் பலி.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி பகுதியில் கிணற்றில் வீழ்ந்த கோழிக்குஞ்சை மீட்க முற்பட்ட தினேஷ் நேசமலர்...

wether
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

இலங்கையினை பொறுத்தவரை இன்று பகல் வேளையில் மனித உடலினால் உணரக்கூடிய எச்சரிக்கை மட்டத்தில் அதிகரித்த வெப்பநிலை...

Pastor Jerome
இலங்கை

அநுரவை புகழ்ந்த சர்ச்சையில் சிக்கிய போதகர்.

மிராக்கல் டோம் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றின் போது, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த, ஜெரோம் பெர்னாண்டோ...