images 1 1
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழ் மக்கள் பேரவை – ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ‘கொள்கைக் கூட்டு’ முடிவுக்கு வருகிறது!

Share

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிரெதிராக தனித்தனியே எதிர்கொண்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் (சங்கு சின்னத்தில் போட்டியிட்டது), அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய தமிழ் மக்கள் பேரவையும், தேர்தலுக்குப் பின்னர் உள்ளூராட்சி நிர்வாகங்களைக் கைப்பற்றுவதற்காகத் தமக்கிடையே அமைத்துக் கொண்ட ‘கொள்கைக் கூட்டு’ச் செயற்பாடு தற்போது முடிவுக்கு வருவதாகத் தெரிகின்றது.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி உட்பட சில உதிரித் தரப்புகளைச் சேர்த்துக்கொண்டு ‘தமிழ் மக்கள் பேரவை’ என்ற பெயரில் உள்ளூராட்சித் தேர்தலைச் சந்தித்த அணிக்கும், சங்கு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையேதான் தேர்தலுக்குப் பின்னர் இந்த ‘கொள்கைக் கூட்டு’ அறிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டு முடிவுக்கு வர முக்கிய காரணமாக, மாகாண சபைத் தேர்தலை வலியுறுத்தும் விடயங்களைக் கையாள்வது தொடர்பில் இரண்டு தரப்புகளுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் இருப்பதாகத் தெரிகின்றது.

இது தொடர்பில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி-யும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் செயலாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்-உம் தெரிவித்த கருத்துக்கள், இந்த ‘கொள்கைக் கூட்டு’ பெரும்பாலும் முடிவுக்கு வருவதை உறுதிப்படுத்துகின்றன.

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...