sittharethen 1 720x375 1
செய்திகள்இலங்கை

புலிகளை விசாரணைக்கு உட்படுத்துவது போராட்டத்தை இழிவுபடுத்துவதாகும்! – சித்தார்த்தன்

Share

தமிழீழ விடுதலைப் புலிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பது ஒட்டுமொத்த போராட்டத்தையும் இழிவுபடுத்தும் செயற்பாடாகும்,

இவ்வாறு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியாகவோ அல்லது கொள்கை ரீதியாகவோ எச் சந்தர்ப்பத்திலும் நாம் ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்க மாட்டோம். இதில் நாம் மிகத் தெளிவோடு இருக்கிறோம்.

விடுதலைப்புலிகளை விசாரியுங்கள் என்று கூறினாலே அவர்கள் போராடியது பிழை என்பது இவர்களின் நிலைப்பாடு. அது இயக்க போராட்டமல்ல.

ஒரு சில தமிழ் மக்களை தவிர, மிகுதி ஒட்டுமொத்த தமிழர்களும் இந்த விடுதலை போராட்டத்தை ஆதரித்தனர், அதில் சிறுசிறு தவறுகள் நடந்திருந்தாலும் அது மக்களின் போராட்டம்.

அத்தோடு கூட்டமைப்பை விட்டு விலகுகிறோம் என நாம் எப்பொழுதும் கூறியதில்லை , . தமிழ் மக்களுடைய பலத்தை உடைக்கும் நிலையை நாம் எடுக்க மாட்டோம்” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...