sittharethen 1 720x375 1
செய்திகள்இலங்கை

புலிகளை விசாரணைக்கு உட்படுத்துவது போராட்டத்தை இழிவுபடுத்துவதாகும்! – சித்தார்த்தன்

Share

தமிழீழ விடுதலைப் புலிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பது ஒட்டுமொத்த போராட்டத்தையும் இழிவுபடுத்தும் செயற்பாடாகும்,

இவ்வாறு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியாகவோ அல்லது கொள்கை ரீதியாகவோ எச் சந்தர்ப்பத்திலும் நாம் ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்க மாட்டோம். இதில் நாம் மிகத் தெளிவோடு இருக்கிறோம்.

விடுதலைப்புலிகளை விசாரியுங்கள் என்று கூறினாலே அவர்கள் போராடியது பிழை என்பது இவர்களின் நிலைப்பாடு. அது இயக்க போராட்டமல்ல.

ஒரு சில தமிழ் மக்களை தவிர, மிகுதி ஒட்டுமொத்த தமிழர்களும் இந்த விடுதலை போராட்டத்தை ஆதரித்தனர், அதில் சிறுசிறு தவறுகள் நடந்திருந்தாலும் அது மக்களின் போராட்டம்.

அத்தோடு கூட்டமைப்பை விட்டு விலகுகிறோம் என நாம் எப்பொழுதும் கூறியதில்லை , . தமிழ் மக்களுடைய பலத்தை உடைக்கும் நிலையை நாம் எடுக்க மாட்டோம்” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...