IMG 20220217 WA0018
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆளும் தரப்பினரால் கெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள்!! – ஜெபநேசன் கவலை!!

Share

ஆளும் தரப்பிலுள்ள இரு மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையேயுள்ள போட்டித்தன்மை காரணமாக அபிவிருத்தித்திட்டங்கள் தடை ஏற்படுத்தப்படுவதுடன் உள்ளூராட்சி மன்றங்களினால் சில திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படமுடியாத நிலையும் காணப்படுவதாக வலிதென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஜெபநேசன் மற்றும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களுக்குட்பட்டு எமது பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை நாங்கள் செய்து வருகின்றோம்.

அவ்வாறான திட்டங்கள் செய்து வருகின்றபோது இன்றைய அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற இரண்டு பிரதிநிதிகளுக்கு இடையில் போட்டி நிலை காரணமாக பல பிரச்சினைகளை நாங்கள் எதிர்கொள்ளவேண்டியுள்ளது.

குறிப்பாக புங்குடுதீவில் அமைக்கப்படவுள்ள ஆர்ஓ திட்டத்தை கல்லுண்டாய் வெளிக்கு மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அது தற்சமயம் புங்குடுதீவுக்கே அமைக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

குறித்த விடயத்தில் புங்குடுதீவுக்கே அது வழங்குவதற்கான திட்டங்கள் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதனை கல்லுண்டாய் வெளிக்கு மாற்ற கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதனால் அந்தத் திட்டத்தை எங்கு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பாக குழப்ப நிலை காணப்பட்டு இறுதியாக புங்குடுதீவிற்கே வழங்கவேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

இது தேவையற்ற குழப்பமாகவே தோன்றியது. இருவருக்குமிடையில் உள்ள போட்டி தன்னமயாலே இது உருவானது.

இவை தொடர்பில் உரிய இடங்களுக்கு நாங்கள் முறையிட்டுள்ளோம். இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. நாங்கள் சிறிது காலம் பார்த்துவிட்டு ஜனநாயக ரீதியான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தயாராகிவருகின்றோம் என்றார்.

இதேவேளை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள கொழும்பு மாநகர சபையின் தவிசாளர் றோசி சேனநாயக்க தலைமையிலான குழுவினர் எமது பிரதேசத்திற்கு வருகை தரவுள்ளனர்.

எங்களால் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாக பார்வையிடவுள்ளதுடன் எத்தகைய திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்பது தொடர்பாகவும் நாங்கள் கலந்துரையாடவுள்ளோம் எனத் தெரிவித்தார்கள்.

குறித்த சந்திப்பில் தவிசாளருடன் உறுப்பினர்களான ரமணன் மற்றும் ஜிப்ரிக்கோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...

04 22
உலகம்செய்திகள்

மழைக்கும் மத்தியிலும் ஈரான் தலைநகரில் பிரம்மாண்டப் போராட்டம்: உச்சத் தலைவருக்கு ஆதரவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் இன்று (மார்ச் 24, 2026)...

03 23
செய்திகள்இலங்கை

சீமெந்து விலை 2,250 ரூபாவாக அதிகரிப்பு: கட்டுமாணத் துறை மேலும் நெருக்கடி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக, கட்டுமாணப் பொருட்களின் விலைகள் மீண்டும்...