பிரியந்த கொலை: பாகிஸ்தான் அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு!

Santha Pandara

இலங்கையர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்தியுள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் கருத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (09) கருத்து வெளியிட்ட சு.க. நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார கூறியவை வருமாறு,

” பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நாம் ஏற்கனவே கண்டித்துள்ளோம். இராஜதந்திர மட்டத்திலான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் செயற்பட்ட விதம் சிறப்பு. அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். ஆனால் கொலையை நியாயப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் கருத்தை கண்டிக்கின்றோம்.” – என்றார்.

#SrilankaNews

Exit mobile version