j
செய்திகள்உலகம்

ஈகுவடாரில் சிறைக் கலவரம் : 24 கைதிகள் பலி!

Share

தென்அமெரிக்கா-ஈகுவடாரில் சிறைக் கலவரம் காரணமாக 24 பேர் பலியாகியுள்ளனர்.

நேற்று முன்தினம் துறைமுக நகரமான குயாகுவில் இருக்கும் சிறைச்சாலையிலேயே இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

‘லாஸ் வெகோஸ்’ மற்றும் ‘லாஸ் கேனரஸ்’ என்று அழைக்கப்படும் இருதரப்பு கைதிகளுக்கிடையிலேயே குறித்த மோதல் உருவாகியிருந்தது.

கைதிகள் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதுடன் துப்பாக்கி சூடு, கையெறி வெடிகுண்டுகளையும் பயன்படுத்தி தாக்ககுதல் நடத்தியுள்ளனர்.

பொலிஸ் மற்றும் ராணுவ வீரர்களால் சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகே கலவரத்தை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரமுடிந்தது.

இருந்த போதிலும் இந்த கலவரத்தில் 24 கைதிகள் கொல்லப்பட்டதோடு 48 கைதிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

அதேவேளை கடந்த பெப்ரவரி மாதம் ஈகுவடாரில் ஒரே நாளில் 3 சிறைகளில் நடந்த மிகப்பெரிய கலவரத்தில் 79 கைதிகள் கொன்று குவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...