Vijitha Herath
செய்திகள்அரசியல்இலங்கை

பணத்தை அச்சிட்டு வழங்குவதால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை! – விஜித ஹேரத்

Share

” பணத்தை அச்சிட்டு 5 ஆயிரம் ரூபா வழங்குவதன்மூலம் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. அது பொருளாதார நெருக்கடியை மேலும் வலுப்படுத்தும்.” – என ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. தெரிவித்தார்.

” நாட்டில் தற்போது பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன. பச்சை மிளகாயின்விலைகூட ஆயிரம் ரூபாவை தாண்டியுள்ளது. இந்நிலையில் 5 ஆயிரம் ரூபாவை வைத்து என்ன செய்வது? காசு இருந்தாலும் சமையல் எரிவாயு வாங்க முடியுமா?

டிசம்பர் 29 ஆம் திகதி இந்த அரசு பணம் அச்சிட்டது. அதனைதான் பகிர்ந்துவருகின்றது. மக்களுக்கு வருமானம் இல்லை, நாட்டில் உற்பத்தி இல்லை. இவற்றுக்கு உரிய தீர்வை தேடாமல் பணத்தை அச்சிட்டு வழங்குவதில் பயனில்லை.” – என்றும் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

” அதேவேளை, பணத்தை அச்சிட்டே அதனை நாட்டு மக்களுக்கு அரசு வழங்குகின்றது. அரசியல் தீர்மானம் பொருளாதாரத்துக்கு தீர்வு அல்ல. ” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...