DSC7829 scaled
செய்திகள்இலங்கை

குவைத் பிரதமர் – ஜனாதிபதி சந்திப்பு

Share

குவைத் பிரதமர் – ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும் குவைத் நாட்டின் பிரதமர் ஷெய்க்சபா அல் – ஹமாட்அல் – சபாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நியூயோர்க்கில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான 50 வருட கால நெருங்கிய தொடர்புகள், நட்புறவுடன் கூடிய இராஜதந்திர உறவுகள் பற்றி இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர்.

இலங்கையர்கள் குவைத்தில் பணியாற்றுவதற்கு மேலும் பல வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

கொவிட் தொற்று பரவல் மற்றும் கட்டப்பாடு, நாட்டுக்குள் முன்னெடுக்கப்பட்டு வரும் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் போன்றன தொடர்பில் எடுத்துரைத்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச,  தொற்றுபரவல் நீங்கி சமூக நிலை திரும்பும்போது இரு தரப்புகளுக்குமிடையிலான தொடர்புகளை பலப்படுத்திக்கொள்ள உள்ள வாய்ப்புக்கள் குறித்தும் எடுத்துரைத்திருந்தார்.

துறைமுக நகரம், சூரிய மற்றும் காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு போன்ற துறைகளில் குவைத் அரசால் மேற்கொள்ளக் கூடிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பிலும் இச் சந்திப்பில்  கலந்துரையாடினர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...