DSC7829 scaled
செய்திகள்இலங்கை

குவைத் பிரதமர் – ஜனாதிபதி சந்திப்பு

Share

குவைத் பிரதமர் – ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும் குவைத் நாட்டின் பிரதமர் ஷெய்க்சபா அல் – ஹமாட்அல் – சபாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நியூயோர்க்கில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான 50 வருட கால நெருங்கிய தொடர்புகள், நட்புறவுடன் கூடிய இராஜதந்திர உறவுகள் பற்றி இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர்.

இலங்கையர்கள் குவைத்தில் பணியாற்றுவதற்கு மேலும் பல வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

கொவிட் தொற்று பரவல் மற்றும் கட்டப்பாடு, நாட்டுக்குள் முன்னெடுக்கப்பட்டு வரும் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் போன்றன தொடர்பில் எடுத்துரைத்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச,  தொற்றுபரவல் நீங்கி சமூக நிலை திரும்பும்போது இரு தரப்புகளுக்குமிடையிலான தொடர்புகளை பலப்படுத்திக்கொள்ள உள்ள வாய்ப்புக்கள் குறித்தும் எடுத்துரைத்திருந்தார்.

துறைமுக நகரம், சூரிய மற்றும் காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு போன்ற துறைகளில் குவைத் அரசால் மேற்கொள்ளக் கூடிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பிலும் இச் சந்திப்பில்  கலந்துரையாடினர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...