Arundika Fernando
செய்திகள்அரசியல்இலங்கை

பதவியை இராஜினாமா செய்யுமாறு அருந்திக்கவுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Share

அமைச்சு பதவியை இராஜினாமா செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளாரென அறியமுடிகின்றது.

இது தொடர்பில் பஸில் ராஜபக்சவுக்கு, அருந்திக்க பெர்ணான்டோ அறிவித்துள்ளார் எனவும், இது சம்பந்தமாக தான் ஜனாதிபதியுடன் கலந்துரையாடும்வரை இராஜினாமா கடிதத்தை அனுப்ப வேண்டாமென பஸில் ராஜபக்ச ஆலோசனை வழங்கினார் எனவும் தெரியவருகின்றது.

ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் இராஜாங்க அமைச்சருக்கு தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இத் தாக்குதல் சம்பவத்தில் நான்கு மாணவர்கள் காயமடைந்தனர்.

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவின் அமைச்சுக்குரிய வாகனமும், அவரின் அதிகாரி ஒருவரும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டமை தெரியவந்தது.

அதேவேளை, அருந்திக்க பெர்ணான்டோவின் மகனும் இச் சம்பவம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்டார்.

மேற்படி சம்பவத்துடன் தனக்கு தொடர்பிருப்பது உறுதிப்படுத்தப்படுமானால் அமைச்சு பதவி துறக்கப்படும் என அருந்திக்க பெர்ணான்டோ அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...