z p01 Gotabaya
செய்திகள்அரசியல்இலங்கை

இந்திய வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதி சந்திப்பு

Share

நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ள இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துள்ளார்.

அபுதாபியில் இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவருக்குமிடையில் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகள் ஏதும் இடம்பெறவில்லை எனவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இவர்களின் சந்திப்பு பசில் ராஜ பக்சவின் இந்திய விஜயத்தின் தொடர்ச்சியாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இலங்கை ஜனாதிபதியை சந்தித்த புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திப்பதில் மகிழ்ச்சி. அவரது உரை தொடக்க அமர்வின் முக்கிய அம்சமாக இருந்தது” என்று மட்டும் பதிவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இலங்கைக்கு பொருளாதார உதவிகளை அளிக்க இந்தியா அரசாங்கம் தயக்கம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...