ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி கன்னி உரை!

1599582341 president 2

எதிர்வரும் 21 ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க்கில் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது அமர்வில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பங்கேற்கவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இதுவே ஜனாதிபதியின் முதல் உரை என்று ம் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த விஜயத்தின்போது கல்வி, விவசாயம் மற்றும் பொருளாதார துறைகள் குறித்து துறைசார் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்கள் நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதியின் இவ் விஜத்தின்போது பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்

நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக ஜனாதிபதி குறைந்த எண்ணிக்கையான பிரதிநிதிகளுடன் இந்த விஜயத்தை மேற்கொள்ள முடிவுசெய்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது .

Exit mobile version