1599582341 president 2
செய்திகள்இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி கன்னி உரை!

Share

எதிர்வரும் 21 ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க்கில் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது அமர்வில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பங்கேற்கவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இதுவே ஜனாதிபதியின் முதல் உரை என்று ம் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த விஜயத்தின்போது கல்வி, விவசாயம் மற்றும் பொருளாதார துறைகள் குறித்து துறைசார் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்கள் நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதியின் இவ் விஜத்தின்போது பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்

நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக ஜனாதிபதி குறைந்த எண்ணிக்கையான பிரதிநிதிகளுடன் இந்த விஜயத்தை மேற்கொள்ள முடிவுசெய்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது .

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...