04 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சார சபை மறுசீரமைப்பு: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க – தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு!

Share

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறை மற்றும் ஊழியர்களின் எதிர்காலம் குறித்த முக்கிய கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. நுகர்வோருக்கு நியாயமான விலையில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவதும், அரசாங்கத்தின் கீழ் வலுசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதுமே இந்த மறுசீரமைப்பின் பிரதான நோக்கம் என ஜனாதிபதி இதன்போது விளக்கமளித்தார்.

மறுசீரமைப்புச் செயல்முறையின் போது, மின்சார சபையின் ஊழியர்களின் உரிமைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்றும், புதிய நிறுவனங்களிலும் அந்த உரிமைகள் முழுமையாக உறுதிப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார். மேலும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மின்சார சபை ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இந்த மாற்றம் என்பது ஒரு சிக்கலான மற்றும் நீண்டகாலத் திட்டமிடல் அவசியமான செயல்முறை என்பதால், ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே சிறந்த புரிதலை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

ஊழியர்களின் மன நிம்மதியையும், திருப்திகரமான பணிச் சூழலையும் உருவாக்குவதே இந்தச் சீர்திருத்தத்தின் வெற்றிக்கு அடிப்படையாகும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் மீதான அக்கறையுடன் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். மின்சாரத் துறையில் எதிர்காலத்தில் வரக்கூடிய சவால்களை வென்று, நுகர்வோருக்குச் சிறந்த சேவையை வழங்குவதற்காக ஒன்றிணைந்து பயணிக்குமாறு அனைத்துத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதியின் கருத்துகளை ஏற்றுக்கொண்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தற்போதைய மின்சக்தித் துறையின் மாற்றத்தின் அவசியத்தை தாங்களும் அங்கீகரிப்பதாகத் தெரிவித்தனர். சீர்திருத்தங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும், நாட்டின் வலுசக்தி இலக்குகளை அடைவதற்கும் அரசாங்கத்துடன் முழுமையான ஒத்துழைப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். சுமுகமான உரையாடல் மூலம் மின்சாரத் துறையின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்கு இந்தச் சந்திப்பு ஒரு சாதகமான தொடக்கமாக அமைந்துள்ளது.

Share
தொடர்புடையது
arested 2
இலங்கை

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

நேற்றைய தினம், அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம்...

QR முறைமை
இலங்கை

QR முறைமை நீக்கப்படுமா?

எரிபொருள் விநியோகத்திற்கான QR முறையும், வரம்புகளும் நீக்கப்பட வேண்டுமென பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளதுடன், இலங்கை...

bus bike accident 1
இலங்கை

தாயையும் மகனையும் காவுகொண்ட கோரவிபத்து!

பகமூண, தமன பகுதியில், பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர்...

கடூழிய சிறைத்தண்டனை
இலங்கை

சிறுமி துஸ்பிரயோகம் – சந்தேக நபருக்கு வவுனியா நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.

கடந்த 2015, 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பிரதேசத்தில் தாயினால் கைவிடப்பட்ட தந்தையின்...