a9
செய்திகள்இலங்கை

மஞ்சள் செடியுடன் பூச்சாடி – வேலைத்திட்டம் ஆரம்பம்!

Share

சகல வீட்டுத் தோட்டங்களுக்கும் மஞ்சள் செடியுடன் கூடிய பூச்சாடியை வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பங்கேற்புடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஐந்து மஞ்சள் செடிகள் அடங்கிய சாடிகள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் ஓர் கட்டமாக, கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னக்கோன் தலைமையில் ஹஸலக்க துங்கொல்ல கிராமவாசிகளுக்கு மஞ்சள் செடிகளை விநியோகிக்கும் திட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது 100 குடும்பங்களுக்கு மஞ்சள் செடிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இத் திட்டத்தின் நோக்கம், எதிர்வரும் காலங்களில், ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான மஞ்சளை அந்தந்த வீட்டுத்தோட்டங்களிலேயே உற்பத்தி செய்ய வழிவகுப்பதாகும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...