cb
செய்திகள்இலங்கை

நாட்டில் பொருள்களின் விலைகள் அதிகரிக்க சாத்தியம்!!!

Share

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு நூறுவீத உத்தரவாத தொகையை செலுத்த வேண்டும் என அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது,

அந்நிய செலாவணியை பாதுகாக்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்படும் 623 வகையான பொருள்களுக்கு குறித்த உத்தரவாத தொகை இலங்கை மத்திய வங்கியால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,
கைத்தொலைபேசி, தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள், மின்விசிறிகள், சலவை இயந்திரங்கள், கடிகாரங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் பொருள்கள்.

பானங்கள், பழங்கள், அழகுசாதனப் பொருள்கள், வாசனைத் திரவியங்கள், பியர், வைன் ஆகியவை.

சீஸ், வெண்ணெய் மற்றும் சாக்லேட் போன்ற உணவுகள்.

ஆகியவை உள்ளிட்ட பொருள்களுக்கு இந்த உத்தரவாத தொகை பொருந்தும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் இந்த திடீர் அதிரடி நடவடிக்கையால், மேற்படி பொருள்களுக்கான இறக்குமதி நடவடிக்கையில் மிகப்பெரும் தாக்கம் ஏற்பட இடமுண்டு. இதன் காரணமாக குறித்த பொருள்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ce

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

1763816381 road 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல்...