cb
செய்திகள்இலங்கை

நாட்டில் பொருள்களின் விலைகள் அதிகரிக்க சாத்தியம்!!!

Share

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு நூறுவீத உத்தரவாத தொகையை செலுத்த வேண்டும் என அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது,

அந்நிய செலாவணியை பாதுகாக்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்படும் 623 வகையான பொருள்களுக்கு குறித்த உத்தரவாத தொகை இலங்கை மத்திய வங்கியால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,
கைத்தொலைபேசி, தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள், மின்விசிறிகள், சலவை இயந்திரங்கள், கடிகாரங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் பொருள்கள்.

பானங்கள், பழங்கள், அழகுசாதனப் பொருள்கள், வாசனைத் திரவியங்கள், பியர், வைன் ஆகியவை.

சீஸ், வெண்ணெய் மற்றும் சாக்லேட் போன்ற உணவுகள்.

ஆகியவை உள்ளிட்ட பொருள்களுக்கு இந்த உத்தரவாத தொகை பொருந்தும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் இந்த திடீர் அதிரடி நடவடிக்கையால், மேற்படி பொருள்களுக்கான இறக்குமதி நடவடிக்கையில் மிகப்பெரும் தாக்கம் ஏற்பட இடமுண்டு. இதன் காரணமாக குறித்த பொருள்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ce

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...