water foll
செய்திகள்இலங்கை

ஆபாச காணொலி – இளைஞனுக்கு தொற்று உறுதி!

Share

இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை, பெலிஹுல் ஓயா பகுதியில் அமைந்துள்ள பஹன் துடாவ நீர்வீழ்ச்சியை பின்னணியாக கொண்டு, அதன் அருகே ஆபாச காணொலியை தயார்செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ள ஜோடியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவர்கள் இருவரையும் குற்ற புலனாய்வுப் பிரிவினர் நேற்று மாலை கைதுசெய்துள்ளனர்.

குறித்த ஆண் மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதானவர் என்றும் பெண் காலியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என்றும் தெரியவருகிறது.

இந்த நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் குறித்த இளைஞனுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த இளம் பெண் அழகுக்கலை நிபுணர் எனவும் இவர்கள் ஏற்கனவே இவ்வாறான ஆபாச காணொலிகளை தயார்செய்து பதிவேற்றியுள்ளமை விசாரணையில் தெரியவருகிறது.

இலங்கை சட்டத்தின்படி ஆபாச காணொலிகள் தயாரிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...