ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரைமீது இன்று 3ஆவது நாளாகவும் நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது.
9ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடரை கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
அரசின் கொள்கை விளக்க உரையையும் முன்வைத்து உரையாற்றினார்.
ஜனாதிபதியின் இந்த உரைமீது 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதம் இடம்பெற்றது. இன்று இறுதி நாள் விவாதமாகும்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.
#SriLankaNews