image 34f084d715
செய்திகள்இலங்கை

புகலிடம் திரும்பினார் பிள்ளையார் – அகற்றப்பட்டது அந்தோனியார் சிலை!

Share

புகலிடம் திரும்பினார் பிள்ளையார் – அகற்றப்பட்டது அந்தோனியார் சிலை!

மன்னார், மடு – பரப்புக்கடந்தான் வீதிப் பகுதியில் இருந்து அகற்றப்பட்ட பிள்ளையார் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் பரப்புக்கடந்தான் வீதியில் மடு தேவாலயத்திலிருந்து 4 km தூரத்தில் மரத்தடியில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை ஒரே இரவில் மாயமாகியதுடன், குறித்த இடத்தில் அந்தோனியார் சிலை வைக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் அவ்விடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது .

இந் நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டி மெல் நேற்றையதினம் (13) சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளார் .

அங்கு வைக்கப்பட்டிருந்த அந்தோனியார் சிலையை பொலிஸார் அகற்றியதுடன். அகற்றப்பட்ட சிலையை மடு பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

தற்போது பிள்ளையார் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, சம்பவம் தொடர்பாக மடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் மரத்தின் கீழ் குறித்த பிள்ளையார் சிலை வைக்கப்பட்டு மக்களால் வழிபடப்பட்டு வருகிறது.குறித்த பகுதி காட்டுப்பகுதி என்பதனால், அப்பகுதியால் செல்பவர்கள் அனைவரும், பிள்ளையார் சிலையை வணங்கி விட்டு செல்வது வழக்கம் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...