Screenshot 20220101 193113 Chrome
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் தொலைபேசி திருட்டு! – வாழைச்சேனையில் மூவர் கைது

Share

யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்து அண்மையில் திருட்டில் ஈடுபட்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் வாழைச்சேனையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகைக்கு தந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை சந்தேகநபர் திருடிய தொலைபேசிகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 6 தொலைபேசியிலும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த டிசெம்பர் 22ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் – கே.கே.எஸ். வீதி – சத்திரச்சந்தியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் திருட்டு சம்பவம் இடம்பெற்றது.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், குறித்த விற்பனை நிலையத்தில் பெறப்பட்ட சிசிரிவி பதிவுகள் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்றுமுன்தினம் வாழைச்சேனை சென்று சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட மூவரும் யாழ்ப்பாணம் அழைத்துவரப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...