நாட்டில் இனி பைஷர் தடுப்பூசிகள் மாத்திரமே! – சன்ன ஜயசுமண

2020 11 09T114528Z 401439984 RC2NZJ9UB98H RTRMADP 3 HEALTH CORONAVIRUS VACCINES PFIZER

எதிர்காலத்தில் பைஷர் தடுப்பூசியை மாத்திரம் நாட்டிற்கு இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,  தற்போது சுகாதார அதிகாரிகளின் பிரதான இலக்கு பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதும் பூஸ்டர் டோஸை வழங்குவதும் என தெரிவித்தார்.

1 ஆவது மற்றும் 2 ஆவது டோஸ்களை வழங்குவதற்கு நாட்டில் போதுமான ஏனைய தடுப்பூசிகள் இருக்கின்றன.

14.5 மில்லியன் பைஷர் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையான தடுப்பூசிகளை வாராந்த அடிப்படையில் விநியோகிக்க உற்பத்தியாளர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version