pfizer vaccine scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் பாடசாலை மாணவர்களுக்கு செவ்வாயன்று பைஸர்

Share

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்,நல்லூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளில் தரம் 11 மற்றும் தரம் 12இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் பைஸர் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது என நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதன்படி, யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரியில் எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமையும் , திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் வியாழக்கிழமையும் மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

நல்லூர் பிரதேச சபை எல்லை பாடசாலைகளில் கல்வி கற்கும் தரம் 11 மற்றும் தரம் 12 மாணவர்கள் தத்தமது பாடசாலை அதிபருடன் தொடர்புகொண்டு, உரிய நேரத்தை முற்காட்டியே பதிவுசெய்து கொள்வதுடன் , 18 வயதிற்கு குறைந்த மாணவ்ர்களை தமது பெற்றோரின் சம்மதம் வழங்கும் விண்ணப்பத்தை தமது பாடசாலை அதிபரிடம் பெற்று , அதனை பூர்த்திசெய்து சமூகமளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை இடைவிலகியவர்களுக்கான தடுப்பூசி எதிர்வரும் 30ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

இதன்படி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை, 22.10.2001 – 21.10.2005 வரை பிறந்தவர்களில், பாடசாலையிலிருந்து இடைவிலகியோர் எதிர்வரும் சனிக்கிழமை கோண்டாவிலில் அமைந்துள்ள நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி பெற வருவோர் தேசிய அடையாள அட்டை அல்லது பிறப்பு சான்றிதழின் பிரதியுடன் சமுகமளிக்க வேண்டும் எனவும் , 18 வயதை பூர்த்தி செய்யாதவர்கள் தமது பெற்றோர்களுடன் சமுகமளிக்க வேண்டும் எனவும் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
dom penzionera 2
செய்திகள்உலகம்

போஸ்னியாவில் முதியோர் இல்லத்தில் கோரத் தீ விபத்து: 11 பேர் பலி; 30-க்கும் மேற்பட்டோர் காயம்!

போஸ்னியாவின் துஸ்லா நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 04) மாலை ஏற்பட்ட...

Dr. Nalinda Jayathissa 2024.08.23 1
செய்திகள்இலங்கை

ஏற்றுமதி கஞ்சா திட்டம்: ‘உள்ளூர் சந்தையில் நுழைய வாய்ப்பில்லை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ!

இலங்கையில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக முதலீட்டு மண்டலங்களில் (Investment Zones) மேற்கொள்ளப்படும் கஞ்சா பயிர்ச்செய்கை திட்டம் தொடர்பான...

crime arrest handcuffs jpg
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

அதிபர் மற்றும் மகன் கைது: ₹ 20 மில்லியன் மதிப்புள்ள ஹெராயினுடன் எப்பாவல ஹோட்டலில் சிக்கினர்!

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் (Heroin) ஒரு பாடசாலை...

10 signs symptoms of drug addiction scaled 1
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர்ச்சி: போதைப்பொருளுக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – அமைச்சகம் கடும் கவலை!

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்துச்...