118379347 f959b3bf db0b 4dc9 822e 64a7ea6170e0
செய்திகள்இலங்கை

சிறுவர்களுக்கு பைஸர்- இம் மாதம் ஆரம்பம்1

Share

நாட்டில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த நடவடிக்கைக்கான திட்டமிடல் அறிக்கை, இலங்கை சிறுவர் நோய் விசேட வைத்தியர்கள் சங்கத்தால் சுகாதார அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், பல்வேறு நோய் நிலைமைகளால் பாதிக்கப்பட்ட 12 வயதுக்கு மேற்பட்ட சுமார் 30 ஆயிரம் சிறுவர்களுக்கு இம் மாதமே பைஸர் தடுப்பூசி வழங்கப்படுதல் இத் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கை என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் ஒக்டோபர் மாத ஆரம்பத்தில், க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள 6 லட்சத்து 46 ஆயிரம் மாணவர்களுக்கும், உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 4 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்களுக்கும் பைஸர் தடுப்பூசி செலுத்துவது இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டமாகும்.

அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட ஏனைய சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...