Udaya.jpg
செய்திகள்இலங்கை

வெறும் 10 நாட்களுக்கே பெற்றோல்! – வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில

Share

நாட்டில் 10 நாட்களுக்கு மட்டுமே பெற்றோல் கையிருப்பில் உள்ளது என வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளமை உண்மையே. இதற்கு தற்போதைய அரசு மட்டும் பொறுப்பல்ல. நாட்டை ஆட்சி சித்த அனைவருமே இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள்.

தற்போது நாட்டில் டொலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் எரிபொருளை இறக்குமதி செய்வதில் மிகப்பெரும் சிக்கலை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

தற்போதைய நிலையில் ‘பெட்ரோல் – 92’ பத்து நாட்களுக்கும், ‘பெட்ரோல் 95’ நாற்பது நாட்களுக்கும், டீசல் எட்டு நாட்களுக்கும், சூப்பர் டீசல் எட்டு நாட்களுக்குமே கையிருப்பில் உள்ளன. மேலும் 6 நாட்களுக்கு தேவையான டீசல் தற்போது இறக்குமதி செய்யப்படவுள்ளது.

இதேவேளை, அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு ஆயிரத்து 285.50 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுகிறது. இந்த நிதியை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...