ankajan
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

மக்களுடைய காணி மக்களுக்கு விடுவிக்கப்பட வேண்டும்! – அங்கஜன் இராமநாதன்

Share

பலாலி விமான நிலையத்துக்கு செல்வதற்கான பாதையை விடுவிக்க வேண்டிய தேவை காரணமாகவே கட்டுவன் – மயிலிட்டி வீதி முதற்கட்டமாக விடுவிக்கப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைதலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் கட்டுவன் – மயிலிட்டி வீதியில் விடுவிக்கப்படவுள்ள 400 மீற்றர் வீதியை பார்வையிட்ட பின்னரே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களுடைய காணி மக்களுக்கு விடுவிக்கப்பட வேண்டும். அதன்படி பொது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான ஆரம்ப செயற்பாடாக இவ் வீதி விடுவிப்பை கருதவேண்டியது அவசியமானதாகும்.

பல்வேறு தரப்புக்களின் கோரிக்கை முயற்சிகளினால் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இதனை செய்ய முடிந்தது.

இந்த அரசாங்கத்தின் மூலம் காணிகள் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. அதை எவ்வளவு செய்ய முடியுமோ அதனை நாம் செய்வோம்.

வலி. வடக்கில் மூன்று கட்டங்களாக காணிகளை விடுவிப்பது தொடர்பில் இராணுவத்தினருடன் பேச ஜனாதிபதி ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். அதன்படி அதற்கான வேலைத் திட்டங்கள் விரைவில் நடைபெறும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...