police
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருடனைச் சுற்றிவளைத்து அடித்துக் கொன்ற மக்கள்!

Share

கொழும்பில் வீடொன்றிற்குள் நுழைந்து, கொள்ளையடிக்க முயன்ற போது, பிரதேச மக்களிடம் சிக்கி, அவர்களின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லேரியா, மாளிகாகொடெல்ல பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது;

கொள்ளையடிப்பதற்கு மூவர் அடங்கிய குப்பல் ஒன்று முயற்சித்தவேளை, வீட்டில் உள்ளவர்கள் கத்தி கூச்சலிட்டமையினால் அயலவர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

இதனையடுத்து மூவரில் இருவர் தப்பிச் சென்ற நிலையில், ஒருவர் அயலவர்களிடம் சிக்கியுள்ளார்.

அப்பிரதேச மக்கள் குறித்த கொள்ளையரைத் தாக்கியதில், படுகாயமடைந்தவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...