Basil 1
செய்திகள்அரசியல்இலங்கை

மீண்டும் ஏமாந்து போய்விட்டார்கள் மக்கள்: எதிர்கட்சி

Share

வரவு செலவுத் திட்டத்தின் பொது மக்களின் நலனுக்கான எதுவும் இல்லை என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலையேற்றம் மற்றும் வருமான இழப்பினால் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இம்முறை வரவு செலவுத் திட்டம் தொடர்பில் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்ததால் அவர்களின் அனைத்து நம்பிக்கைகளும் பொய்த்துப் போயுள்ளதாக கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கும், இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்கும், நாட்டுக்கு முதலீடுகளை வரவழைப்பதற்கும் எந்தவொரு நடவடிக்கையும் வரவு செலவுத் திட்டத்தில் எடுக்கப்படாமைக்கு எதிர்க்கட்சி வருத்தம் அளிக்கிறது.

அரசாங்க வருமானம் 500 பில்லியன் ரூபாவால் குறைந்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்த போதிலும், அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களே அந்த வருமானம் குறைவதற்கு முக்கிய காரணம்.

வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகைகளினால் நாட்டுக்கு 500 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கிரியெல்ல தெரிவித்தார்.

நாடு எதிர்நோக்கும் நெருக்கடியை போக்க நீண்ட கால திட்டமொன்றை மக்கள் எதிர்பார்த்திருந்த போதிலும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அவ்வாறானதொரு விடயம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...